திருக்குறள்

1211.

காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து.

திருக்குறள் 1211

காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து.

பொருள்:

வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?.

மு.வரததாசனார் உரை:

( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.

சாலமன் பாப்பையா உரை:

என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?.